சமூக செய்தி
சிரியாவின் பிரச்சனையை தீர்க்க உலக நாடுகளின் ஒன்று கூடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூலை 2012, 03:31.37 பி.ப GMT ]
ஜெனீவாவில் நேற்று சிரியாவின் பிரச்னை குறித்துப் பேச உலகநாடுகள் ஒன்று கூடின. சிரியாவின் நிலைமை மிகவும் மோசமாவதை அறிந்து அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தில் இக்கூட்டம் அமைக்கப்பட்டது.

அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர ஐ.நாவின் பிரதிநிதி கோஃபி அன்னானும் பிரிட்டன், சீனா, ரஷியா, அமெரிக்கா, ஈரான், குவெத், கத்தார், துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஈரானும் சவுதி அரேபியாவும் அழைக்கப்படவில்லை.

சிரியாவில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கைக் குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் சிரியா மக்களின் சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளையும், கொள்கைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று அன்னான், தெரிவித்தார். பின்பு இந்த அரசியல் மாற்றத்திற்கான வழிமுறைகளையும், கொள்கைகளையும் உருவாக்க அமெரிக்க ரஷியத் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

பலமுறை தடை பட்ட இந்தக் கூட்டம் பின்பு நீண்ட நேரம் தொடர்ந்தது. பத்திரிகையாளரிடம் பேசிய ஹிலாரி கிளிண்டன், இந்தக் கூட்டத்தில் ஆதரவளித்தால் சிரியாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.

சிரியாவில் அரசியல் மாற்றம் தேவை என்ற எண்ணம் அனைவரிடத்திலும் காணப்படுவதாக மத்தியகிழக்கு நாடுகளுக்கான சுவிஸ்ஸின் சிறப்புத் தூதுவர் ஜுன் டேனியல் தெரிவித்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]