சமூக செய்தி
கிரெடிட் சுவிஸ் வங்கியில் ஆட்குறைப்பு
[ புதன்கிழமை, 27 யூன் 2012, 02:39.32 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் உள்ள கிரெடிட் சுவிஸ் வங்கி தன் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரை ஆட்குறைப்புச் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் மூத்த மேலாளர்களும் அடங்குவர்.

இன்னும் 12 மாதத்துக்குள் இந்த ஆட்குறைப்பு நிறைவேறும் என்று பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் கிரெடிட் சுவிஸ் வங்கியிலிருந்து எந்த விளக்கமும் வெளிவரவில்லை.

தரமதிப்பீட்டில் குறைவான மதிப்பைப் பெற்றாலும் சந்தையில் ஏற்பட்ட இழப்பை இதனால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு நிலையில் சந்தை வர்த்தகப் பிரிவில் திண்டாடி வரும் கிரெடிட் சுவிஸ் ஆட்குறைப்புச் செய்ய முன்வந்ததில் பொருளாதார அறிஞர்களுக்கு வியப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

வங்கி ஆய்வாளரான ரெய்னர் ஸ்கியர்கா, இந்த ஆட்குறைப்பை கிரெடிட் சுவிஸ் எப்போதோ செய்திருக்க வேண்டும். இது காலந்தாழ்த்திய முடிவு என தெரிவித்தார். 2007 முதல் 2009 வரையிலான பொருளாதார நெருக்கடியின்போது அதன் விளைவுகளைப் பற்றி கிரெடிட் சுவிஸ் நன்கு தெரிந்து கொண்டது. ஆனால் கட்டமைப்பில் மாற்றம் எதனையும் அப்போது கொண்டுவராமல், தவறான வழியில் சென்றது.

வங்கி அதிகாரிகளும், நிர்வாகமும் நிம்மதியாக இருந்தனர். வங்கியின் சீர்திருத்தம் குறித்து சிறிதும் சிந்திக்கவேயில்லை. முதலீட்டாளர் வெளியேறியதை குற்றம்சாட்டியவாறு வங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.

2011இன் இறுதிக் காலாண்டு அறிக்கையில் நிகர நஷ்டம் 637 மில்லியன் சுவிஸ் ஃபிராங்கை எட்டியிருந்தது. 2011ம் ஆண்டில் மொத்த இலாபம் 1.95 பில்லியன் சுவிஸ் ஃபிராங்காக இருந்தது. ஆனால் இதற்கு முந்தைய ஆண்டான 2010ம் ஆண்டில் இதே இலாபம் 5% பில்லியனாக இருந்தது.

கடந்த ஆண்டு ஆட்குறைப்பு உண்டு என்று அறிவித்தாலும் 3500 பேர் மட்டுமே வெளியேற்றப்படுவர் என்று அறிவித்தது. ஆனால் ஜுரிச்சில் இருந்த UBS வங்கி 3900 பேர் வேலையிழக்க நேரிடும் என்று அறிவித்திருந்தது.

சமீபத்தில் கிரெடிட் சுவிஸ் தாம் ஏற்கெனவே அறிவித்தபடி 2000 பேர் வேலையிழக்கப் போவதாகத் தெரிவித்தது. இவ்வங்கியின் அறிக்கை ஏற்கெனவே அறிவித்த ஆட்குறைப்பைத் தான் இப்போது நடைமுறைப்படுத்தப் போவதாகவும் புதிதாக ஆட்குறைப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிஸ் பேராசிரியரின் பொய்யும் புரட்டும் அம்பலமாயிற்று
உலகம் சுற்றும் படகோட்டிக்கு வந்த சோதனை
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடித்தளக் கட்டுமானத் திருப்பணி நிறைவு
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி
மலைப்பகுதியில் விடுமுறை இல்லங்கள் கட்ட நீதிமன்றம் தடை
சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:42.14 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். [மேலும்]
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:46.23 பி.ப ] []
ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியில் ஸ்வீடன் அணி சுவிட்சர்லாந்து அணியை 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. [மேலும்]
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ]
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்]
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]