சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரத்தில் சுவிஸ் அகதிச் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதை எதிர்த்து அகதிகள் போராட்டத்தில் இறங்கினர்.தொழிற்சங்கம், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்பு போன்றவையும் இந்த அகதிகளோடு கைகோர்த்து நின்ற இந்த இப்போராட்டத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.
அகதிகளாக வருவோருக்குரிய சமூக நலத்திட்ட உதவிகளை மறுத்தல், அகதிக் குடும்ப உரிமைகளை வரையறுத்தல், ஒத்துழைக்காத புகலிடம் தேடுவோரை அடைத்து வைக்கத் தனியாக மையங்கள் போன்ற கட்டுப்பாடுகளை அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கடந்த வாரம் இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டது. உடனே அகதிகள் போராடத் திட்டமிட்டு சமீபத்தில் தலைநகரின் ரயில் நிலையத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்தினர்.
அகதிகளிடம் காட்டப்படும் பாகுபாடு, சுரண்டல், ஒதுக்கிவைத்தல் ஆகியற்றிற்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தினர். பசுமைக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பல்தாசார் கிளாட்லி, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் மனித நேயத்துக்கு எதிரானவை என்றார்.
சுவிட்சர்லாந்தில் பயம், கோபம் போன்றவற்றிற்கு இடமில்லை. துணிவு, நம்பிக்கை, ஒற்றுமை ஆகிய பண்புகளுக்கு இடமுண்டு என்றார். கிளாட்டிலி புகலிடம் தேடி வருவோர், நமது மக்கள் தொகையில் 0.2% தான் அகதிகளோ 0.6% மட்டுமே.
இந்நிலையில் இன்னும் ஏராளமானோர் வந்து தங்க நமது நாட்டில் இடமும், வனமும் இருக்கின்றது என்றும் கூறினார். இந்தப் போராட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் நகரில் இருந்து ஸ்ட்ராஸ்போக் வரை 130 பேர் கொண்ட ஒரு குழு நடந்து வந்தது.
இவர்களுக்கு ஐரோப்பாவில் எந்த அதிகாரமும், தகுதியும் கிடையாது. இவர்கள் சமீபத்தில் பேஸெல் வழியாக ஸ்காட்லாந்தின் எல்லையைக் கடந்து வந்தனர். |