சிரியாவின் போர்ச்சூழல் குறித்து ஜெனீவா நகரில் உள்ள முகம்மது-ரெசா டிஜலிலி(Mohammad-Reza Djalili) என்ற நிபுணர் பத்திரிக்கை நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது இப்போதைக்கு அமைதி திரும்புவது கடினமே என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.விடுதலைப்படைக்கு போதிய ஆட்கள் இல்லாத போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதுங்கியிருந்து, பின்பு படைகளைப் பலப்படுத்தி மீண்டும் போரைத் தொடங்கலாம்.
1. ஆசாதின் ராணுவம் பின்னடைவைச் சந்திக்குமா? அப்படி நடக்க வாய்ப்பில்லை, ஆசாதிடம் இன்னும் வலுவான துருப்புச்சீட்டுகள் இருக்கின்றன. அவர் அலாவி(Alawi), கிறிஸ்தவர், சன்னி முஸ்லீம்களின் ஒரு பகுதியினர் போன்றோரின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் எனவே ராணுவப் படை பின்னடைய வாய்ப்பில்லை.
2. அண்டை நாடுகள் இந்த பிரச்னைகளில் பங்குபெறுமா? இப்போதே ஆயிரக்கணக்கானோர் லெபனானுக்கு தப்பி ஓடிவிட்டனர். இன்னும் ஜோடான், துருக்கி போன்ற நாடுகளும் இப்பிரச்னையால் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில் பங்கு பெற வாய்ப்புள்ளது.
3. லெபனானில் இருக்கும் சூழ்நிலை சிரியாவிலும் ஏற்படுமா? ஏற்படலாம், இரண்டு நாடுகளின் இனம் மற்றும் மதம் ஒன்றாக இருப்பதால் இவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்க இயலாது. ஆனால் ஆசாத் தனக்கு தோல்வி ஏற்படும் சூழ்நிலையில் நாட்டின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஒழிந்து கொள்வதால் மீண்டும் வந்து போரைத் தொடரலாம் என்றார்.
4. சிரியாவின் பிரச்னையினால் மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையே அதிகாரப் போராட்டம் ஏற்பட்டுள்ளதா? ரஷ்யாவும் சீனாவும் ஆசாத்திற்கு ஆதரவாக இருக்கின்றது. அதே சமயம் மேலை நாடுகள் சிரியாவின் ராணுவப் படைக்கு ஆதரவாக உள்ளன. அதே வேளையில் ஈரான் ஆசாதின் ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்யக்கூடும்.
இதன் மூலமாக மத்திய தரை கடலின் கிழக்குப் பகுதி ஈரானுக்கு கிடைக்கும். இதனால் சில கீழை நாடுகள் ஓர் அணியிலும் மேலை நாடுகள் ஓர் அணியிலும் செயல்படுவதைக் காணமுடிகிறது.
5. ஈரானுடைய ஆதரவு ஆசாத்திற்கு எவ்வளவு இருக்கும்? நூறு சதவிகிதம் இருக்கும் என்றார். மேலை நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதைப் போல ஈரான் சிரியாவின் ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்வதோடு மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்ப ரீதியாகவும் பேருதவிகளைப் புரிந்து வருகிறது. மேலும் ஈரான், ஈராக் அரசுடன் இணைந்தும் ஆசாத்திற்கு உதவி செய்கின்றது என்றார்.
6. மேலை நாடுகள் ஈரானை நேரடியாகத் தாக்க முயலாமல் சிரியாவைத் தாக்குவதன் மூலமாக ஈரானுக்கு தொல்லைக் கொடுக்கின்றதா? ஷியா முஸ்லீம்களின் அதிகாரம் நிலவும் பகுதி ஈரான் தவிர இவர்கள் ஈராக்கிலும், பாலஸ்தீனம், லெபனான் பகுதியிலுள்ள ஹெஸ்பெல்லோ இயக்கமாகவும் காணப்படுகின்றனர். இந்த பிரச்னையில் வளைகுடா நாடுகள் துருக்கியோடு இணைந்து சன்னி முஸ்லீம்களுக்காக போரிட முன்வரும்.
அதே வேளையில் சிரியாவில் நடக்கும் போர் சன்னி, ஷியா முஸ்லீம்களுக்கு இடையிலான போராக உருவெடுப்பதையும் கிழக்கு, மேற்கு நாடுகளுக்கிடையிலான போராக நிறம் மாறுவதையும் காணமுடிகிறது. |