வணிக செய்தி
ஆயுத ஏற்றுமதி: அரபு நாடுகளுக்கு விதித்த தடையை நீக்கியது சுவிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:48.47 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக நிதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிரியா கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் சுவிஸ்ஸில் தயாரான கையெறி குண்டுகள் இருப்பது செய்தித்தாள்களில் படமாக வெளிவந்தது. இதனை அறிந்த சுவிஸ் இனி அரபுநாடுகளுக்கு சுவிஸ்ஸிலிருந்து ஆயுத ஏற்றுமதி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.

2003ம் ஆண்டில் ஐக்கிய அரபுநாடுகளுக்கு சுவிஸ் அனுப்பிய கையெறி குண்டுகள் நிறைந்த சரக்கு கப்பல் ஒன்று அங்கிருந்து சிரியாவிற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று சுவிஸ் அரசு கருதுகிறது.

ஏனெனில் சிரியாவுக்கு கடந்த 1998ம் ஆண்டிற்கு பிறகு சுவிஸ் ஆயுதம் எதுவும் அனுப்பவில்லை. எனவே செய்தித்தாள்களில் வந்திருக்கும் கையெறிகுண்டுகள் சுவிட்சர்லாந்து அனுப்பியதாக இருக்க வாய்ப்பில்லை என சீகோ எனப்படும் பொருளாதார நடவடிக்கைக்கான அரசுத் துறை சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

சிரியாவின் போராளிகள், கையில் சுவிஸ் நாட்டு குண்டுகளை வைத்திருப்பதாக இரண்டு சுவிஸ் பத்திரிகைகள் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் சட்டத்துக்குப் புறம்பாக ஜுன் மாதத்தின் நடுவில் எடுக்கப்பட்டதாகும்.

சுவிஸ் அரசின் ருவாத் என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டில் 225,162 கையெறிகுண்டுகளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு அனுப்பியது உண்மைதான். இந்நிலையில் செய்தித்தாளில் வெளிவந்த படங்கள் எழுப்பிய சர்ச்சையில் இனி அரபு நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதில்லை என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சுவிஸ் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டில் 25 PC-21 பிலேட்டஸ் பயிற்சி விமானங்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் ராணுவத் தளவாடங்களை சுவிஸ்ஸிடமிருந்து அரபுநாடுகளே வாங்கி வந்தன. இந்த விமானங்களுக்கான பராமரிப்புச் சேவையை சுவிஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் லிபியாவில் மம்மர் கடாபியை எதிர்த்துப் போராடிய மக்களின் கைகளில் சுவிஸ்ஸின் ஆயுதங்கள் இருப்பதாக செய்தி வெளிவந்தது. உடனே கத்தாருக்கு ஏற்றுமதி செய்த ஆயுதங்களை சுவிஸ் நிறுத்திவிட்டது.

பிறகு ஐந்து மாதங்கள் கழித்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் சபை, ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி குறித்து கருத்தரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஆயுத ஏற்றுமதி மற்றும் அவற்றை இடம் மாற்றுவது குறித்து விதிகள் வகுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]